தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்? லாஸ்ட் ரவுண்ட் ரிசல்ட்! !!!

Go down

எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்?  லாஸ்ட் ரவுண்ட் ரிசல்ட்! !!! Empty எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்? லாஸ்ட் ரவுண்ட் ரிசல்ட்! !!!

Post by கிருஷ்ணன் Mon Apr 11, 2011 6:43 pm

பொதுத் தேர்தல் களம் என்பது விசித்திரமான ரசாயனக் களம். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றும். ஒரு சிறு நிகழ்வு சகலத்தையும் தலைகீழாக மாற்றிவிடும். 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை அப்படியான தலைகீழ் மாற்றத்திற்குரிய நிகழ்வொன்றும் இதுவரை நடக்க வில்லைதான். ஆனால் கடுமையான போட்டி நிலவியிருக்க வேண்டிய தேர்தல் களத்தை தி.மு.க. கூட்டணிக்கு சாதகமானதாய் வலியச் சென்று நிலைநிறுத்தி புண்ணியம் செய்திருப்பது செல்வி. ஜெயலலிதாவின் போக்கு.

எம்.ஜி.ஆர். காலத்தில் கிராமங்கள் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டைகள். நகர்ப்புறங்களோ தி.மு.க. களமாடும் கொத்தளங்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நெஞ்சங்களை ஆழமாக வசீகரித்து விட்டன. ஆதலால் இப்போது கிராமப்புறங்களில் முதல் கதாநாயகன் தி.மு.க.தான். அதிலும் முக்கியமாக பெண்கள் மனங்களில்.

அதேவேளை மிக நீண்டகாலமாய் தி.மு.க.வே கண்கண்ட தெய்வமென விசுவாசம் காட்டி வந்த நகர்ப்புற மற்றும் படித்த நடுத்தர வர்க்க மக்கள் மனங்களிலோ சில நெருடல்கள். சமீப ஆண்டுகளில் கூலிவேலை செய்பவர்களுக்குக் கூட ஊதியம் பெரிதாக உயர்ந்தது உண்மையென்றாலும் விலைவாசி உயர்வை நடுத்தர வர்க்க மக்கள் முக்கிய பிரச்சினையாகவே பார்த்தார்கள். குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு இன்று எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல என்பது நன்றாகவே இத்தொகுதி மக்களுக்குத் தெரியும். ஆனால் தி.மு.க.வில் இதன் அளவு கூடிவிட்டதாக நினைக்கத் தலைப்பட்டனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை வாக்களிக்க வெளியே வராத மேனா மினுக்கி மேல்தட்டு வர்க்கத்தினரிடையேதான் பேசு பொருளாயிருக்கிறது. சாமா னிய மக்களுக்கு 2ஜி ஒரு பிரச்சினையே இல்லை என்பதை எமது ஆய்வு தெளிவாகக் காட்டியது. ஆ.ராசாவின் அரசியல் களங்களான பெரம்பலூர்-அரியலூர்-ஊட்டி மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி நோக்கி நடைபோடுகிற தென்பது அதற்குச் சான்று. அதே வேளை அடிமட்ட அளவில் சில பகுதிகளில் கட்சிக்காரர்களின் அட்டகாசம் நடுத்தர வர்க்க மக்க ளின் கடும் அதிருப்திக்கு உள்ளாகி யிருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகரில்- உண்மையில் சீனா போன்ற கம்யூனிச நாடுகளிலென் றால் சென்னை மாநகரில் முக்கால் வாசி கவுன்சிலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள்.

இப்படிச் சில காரணங்களால் அதிருப்தியடைந்திருந்த படித்த நடுத்தர வர்க்க மக்களில் ஒரு தொகுதியினர் "ஆட்சிமாற்றம் வரட்டுமே' என நினைக்கத் தொ டங்கியிருந்தனர். எக்கட்சியும் சாராத இவர்களின் எண்ணிக்கையை உறுதியான கூட்டணி, தீவிரமான பிரச்சாரம், கவர்ச்சியான தேர்தல் அறிக்கை இவற்றின் மூலம் அ.தி. மு.க. கூட்டணியால் விரிவுபடுத்தி யிருக்க முடியும். விரிவுபடுத்தி வெற்றிக்கு அருகில் வந்திருக்கவும் முடியும். ஆனால் நடந்ததோ நேர்மாறாக இருந்தது.

கடந்த ஐந்தாண்டு காலம் அ.தி.மு.க.வின் நீண்டகாலத் தொண்டனை விட கண்மூடித்தன மான விசுவாசம் காட்டிய வைகோவை ஜெயலலிதா, கூட்டணியிலிருந்து கழட்டி விட்டது முதல் திருப்புமுனை. பத்து பதினைந்து தொகுதிகளில் வெற்றி தோல்வியை உறுதியாகத் தீர்மானிக்கும் வலு ம.தி.மு.க.வுக்கு உண்டு. அதைவிட முக்கியமாக வைகோ வெளியேற்றப்பட்ட விதம். ஆட்சி மாற்றம் வரட்டுமே என நினைக்கத் தொடங்கியிருந்த கட்சி சார்பற்ற நடுத்தர வர்க்க மக்களை ""அய்யய்யோ... இந்தம்மா திருந்தவே இல்லை... இதன் ஆணவமும் எதேச்சதிகாரப் போக்கும் மாறப் போவதுமில்லை...'' என்ற மனநிலைக்குத் தள்ளியது.

இன்றும் தி.மு.க.வின் தனிப்பெரும் பலம் கலைஞர் என்ற ஆளுமை. பல்வேறு சக்திகள் தி.மு.க.வை சுற்றி நெருக்கடி வளையம் அமைத்த சூழலில் கூட பொறுமை, சாணக்கியம் இழந்து விடாமல் கூட்டணி ஏற்பாட்டினை அவர் நெறி செய்த பாங்கு மக்களிடையே நல்ல தாக்கம் ஏற் படுத்தியது. கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது காங்கிரஸ் கட்சியோடு மனஸ்தாபங்கள் ஏற்பட்டபோதும் பிரச்சாரம் தொடங்கியபின் மனஸ்தாபங்களை, சுமைகளை அகற்றி செயற் பட்ட பாங்கும், சோனியாகாந்தி உள்ளிட்ட கூட் டணித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியதும், பிரதமர் கோவையில் பிரச்சாரம் செய்ததும் தி.மு.க. கூட்டணிக்கு முக்கிய ப்ளஸ் பாயிண்டுகள்.

இதற்கு நேர்மாறாக அ.தி.மு.க. கூட்டணி யின் முதுகெலும்பான அ.தி.மு.க.-தே.மு.தி.க. இணைவை ஜெயலலிதா துச்சமாகவே கருது கிறார். விஜயகாந்த்துடன் கூட்டணி ஏற்படுத்திய தையே தனது மகத்துவத்திற்கு ஏற்பட்ட இழுக் காக அவர் கருதுவது போலத்தான் தெரிகிறது. இன்றுவரை இருவரும் ஒரே மேடையில் பிரச் சாரம் செய்ய முடியவில்லையென்பது ஒரு விசித்திரம். நேருக்கு நேர் உட்கார்ந்து பேசக்கூட முடியாதவர்களையும் ஒரு மேடையில் தோன்றி மக்களை சந்திக்க முடியாதவர்களையும் கூட்டணிக்காரர்களாக மக்களால் பார்க்க முடிய வில்லை. குறிப்பாக, துடிப்பாக வேலை செய்யக்கூடிய தொண்டர் கூட்டம் தே.மு.தி.க.விற்கு இருக்கிறது. அவர்களால் வந்திருக்கக்கூடிய பலன்களை முழுமை யாக அறுவடை செய்ய அ.தி.மு.க. தவறிவிட்டி ருக்கிறது.

மேலும், திடீரென 160 வேட்பாளர்களின் பட்டியலை ஜெ. தன்னிச்சையாக அறிவித்தது சொந்தக் கட்சித் தொண்டர்களையும் கூட்டணிக் கட்சியினரையும் விரக்தி அடைய வைத்துவிட்டது. கூட்டணிக் கட்சியினரின் மூன்றாவது அணி உருவாக்கத்திற்கான முயற்சிகளும், அ.தி.மு.க. அணியின் வலிமைக்கு ஏற்பட்ட சோதனையாகும்.

தி.மு.க.விற்காக ஊடகங்கள் பொதுவிலும் -குறிப்பாக ஆங்கில ஊடகங்களும் உருவாக்கிய பிரம் மையால் சென்னையை முற்றாக தி.மு.க. இழந்துவிடும் என்ற தோற்றம் உருவானது. கள ஆய்விற்கு எமது அணிகள் முதற்கட்டமாய் புறப்பட்டபோது எமக்கும் அதே எண்ணம்தான் இருந்தது. ஆனால் இரண்டு கட்ட ஆய்வுக்குப்பின் அது உண்மையல்ல என்பது தெளிவாகிறது. கவுன்சிலர்கள் மீது மக்கள் செம கடுப்பில் இருந்தாலும் தி.மு.க. அரசை ""செயற்படும் அரசு'' என்றுதான் பெரும்பான்மையோர் மதிப்பிடு கின்றனர். துணை முதல்வரை மிதமான, பண்பட்ட எதிர்காலமாகப் பார்க்கிறார்கள். மேயர் சுப்பிர மணியனை வெகுவாகப் பாராட்டுகிறார்கள். விளைவு ஆங்கில ஊடகக் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கி கணிசமான தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி முகம் காண்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறதென்றால் வட மாவட் டங்கள், மத்திய காவிரிப்படுகை மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி மிகத் தெளிவான முன்னிலையில் நிற்கிறது. அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை மேற்கு மண்டலத்திலும் தென்மேற்கு மாவட்டத் திலும் முன்னிலை காட்டுகிறது. தென்தமிழகத்தில் கடும்போட்டி நிலவினாலும் அதிகபட்ச தொகுதி களை தி.மு.க. கூட்டணியே தட்டிச் செல்கிறது.

அதிர்ஷ்டசாலிகளென்றால் இந்த முறை பா.ம.க.தான். தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சியினரதும் நம்பிக்கையை ஒரு கட்டத்தில் இழந்திருந்த பா.ம.க. கலைஞரின் தாராளமனதால் புதுவாழ்வு பெற்றிருக்கிறது எனலாம். விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வலிமை சேர்க்கிறார்கள்.

தே.மு.தி.க.வின் தேர்தல் அரசியல் தலையெழுத்து ம.தி.மு.க.வின் சரிதையைப் போல் கதை வடிவம் பெறுகிறதா என்ற ஐயத்தை நக்கீரன் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் கணிசமான ஆதரவுத்தளத்தை வைத்துக்கொண்டு வெற்றிகரமான தரகு அரசியல் நடத்துவது பா.ம.க.வின் சாமர்த்தியமென்றால் பரந்துபட்ட தமிழகம் தழுவிய ஆதரவினை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் அதிகம் தொகுதிகளை வெல்ல முடியாத பலவீனம் தே.மு.தி.க.வின் சாபமாக இருக்கிறது. தே.மு.தி.க.வால் அ.தி.மு.க. அடையும் லாபத்தில் கால் பங்கு கூட அ.தி.மு.க.வால் தே.மு.தி.க.வுக்கு இல்லை என்பது விசித்திரமான உண்மை. இத்தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க. எட்டு தொகுதிகளை வென்றாலே பெரிய விஷயம்தான்.

கொங்கு முன்னேற்றக் கழகத்தோடான தி.மு.க.வின் கூட்டணி மேற்கு மண்டலத்தில் தி.மு.க.விற்கு அதிசயம் எதையும் நிகழ்த்தவில்லை. யதார்த்தத்தில் கொங்கு இங்கு சேர்ந்ததால் ஏனைய சாதியினர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாய் மெல்ல நகர்ந்துள்ளனர். மட்டுமன்றி தி.மு.க. கொ.மு.க. விடையே அடிமட்ட ஒருங்கிணைப்பும் திறன்மிக்கதாக இருக்கவில்லை.

""தானும் கெட்டான். சேர்ந்தவனையும் கெடுத்தான் பேர்வழி'' என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். போட்டியிடும் 63 தொகுதிகளில் 25 தொகுதிகளை இக்கட்சி வென்றாலே பெரிய சாதனைதான். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை மனஸ்தாபங்களின்றி நடத்தி, நல்ல வேட்பாளர்களோடு 45 தொகுதிகளில் மட்டும் போட்டி யிட்டிருந்தால் 35 தொகுதிகளை நிச்சயம் வென்றிருப்பார் கள். தி.மு.க.வும் தனித்தே 115 தொகுதிகளை வென்றிருக்கும். அவ்வகையில் தி.மு.க. கூட்டணிக்கும் தனக்கும் மிகப்பெரும் கேடு செய்த கட்சியென்றால் காங்கிரஸ்தான்.

இவை அனைத்தையும் கடந்து தி.மு.க. கூட்டணி வெற்றி முகம் கண்டு நின்றிடக் காரணம்,. கலைஞரின் சாதுர்யமும், தேர்தலை அடிமட்ட அளவில் நிர்வகிப்பதில் தி.மு.க.விற்கு உள்ள ஆற்றலும்தான்.

இருப்பினும், இந்த முறையும் தனிக்கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாவ தால், கூட்டணி ஆட்சி என்ற புதிய அனுபவத்தை பெறவிருக்கிறது தமிழக சட்டமன்றம். தி.மு.கவின் பெரிய தோழமைக் கட்சியான காங்கிரஸ் மட்டுமின்றி, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது என்பதைத்தான் நக்கீரன் சர்வே முடிவுகள் வெளிப்படுத்து கின்றன.

நக்கீரனின் முதற்கட்ட சர்வே, நான்கு இதழ்களில் வெளியானது போலவே, இரண்டாம் கட்ட சர்வேயும் முதல் இதழில் 117 தொகுதிகளின் முடிவு களுடனும் இரண்டாவது இதழில் 58 தொகுதிகளின் முடிவுகளுடனும் வெளி யிடப்பட்டு, இந்த மூன்றாவது இதழில் மீதமுள்ள 59 தொகுதிககளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இரண்டு பெரிய கூட்டணிகளிலும் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் எத்தனைத் தொகுதி களில் வெற்றிவாய்ப்பு என்கிற பட்டியல், சர்வே முடிவுகளின் இறுதியில் தரப் பட்டுள்ளது.

தேர்தல் களத்தின் நாடித் துடிப்பைத் துல்லியமாகத் தருவது நக்கீரன் சர்வே முடிவுகளே என்பது வாசகர்களும் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் அளித்துள்ள நற்சான்றிதழ். களத்தின் இறுதி நிலவரத்தின் அடிப்படையில் கிடைத்த முடிவுகளையே இங்கு வெளி யிட்டுள்ளோம்.

தோல்வி முடிவுகளுக்குரிய கட்சிக்காரர்கள் இதனால் சோர்வோ வெறுப்போ கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

விருப்பு-வெறுப்புகளற்ற இந்த இறுதி நிலவரத்தை அனைத்துக் கட்சிகளின் தொண்டர்களும் தேர்தல் களப் பணியாளர்களும் தங்கள் பணியை மேலும் கூர்மைப் படுத்துவதற்கான வாய்ப்பாகக் கையாண்டு, நேர்மையான தேர்தலுக்கும் ஜனநாயகத்தின் மாண்புக்கும் துணை நிற்கவேண்டும் என்பதே நக்கீரனின் விருப்பம்.

-ஆசிரியர்






கிருஷ்ணன்
கிருஷ்ணன்
Admin
Admin

பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum